தமிழ்நாடு

பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது மாரடைப்பால் மரணம் அடைந்த அதிமுக எம்பி!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக எம்பி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக மாநிலங்களவை எம்பி முகமது ஜான் அவர்கள் வாலாஜாபாத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து உள்ளது என்பது தெரிகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

கடந்து 2019ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவைக்கு முகமது ஜான் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த முகமது ஜான் அவர்கள் மறைவிற்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version