தமிழ்நாடு

அதிமுக எம்.எல்.ஏ-விடம் ரோடு போட்டுத் தருமாறு கேட்ட மக்கள்; ரகளையில் ஈடுபட்ட எம்.எல்.ஏ ஆதரவாளர்கள்!

Published

on

இன்னும் இரண்டு வாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும், திமுக தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் தான் இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விக்கிரவாண்டி பகுதியில் அதிமுக எம்.எல்.ஏ முத்தமிழ்ச் செல்வன், வாக்கு கேட்டு வேனில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த அப்பகுதி மக்கள், ‘திட்டம் போட்றதெல்லாம் இருக்கட்டும். முதல்ல ரோடு போட்டுக் கொடுங்க’ என்று முறையிட்டனர்.

அதற்கு எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் மக்களை அச்சுறுத்தி, பேசக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். இருப்பினும் மக்கள் தொடர்ந்து முத்தமிழ்ச் செல்வனிடம் முறையிட்டுள்ளனர். மேலும் மக்கள் நடந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பரவ விட்டுள்ளனர்.

இந்த சம்பவமும் அது குறித்தான காணொலியும் விக்கிரவாண்டி பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version