தமிழ்நாடு
ஆடிக்காற்று, அம்மிக்கல்லு, மம்மி ஆட்சி: சட்டசபையில் சுவாரஸ்யமான விவாதம்!
![TN Assembly - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/TN-Assembly-1.jpg)
தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் திமுக உறுப்பினர் பூங்கோதை கூறிய கருத்துக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் கூறிய பதில்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடைகளில் விற்கப்படும் குழந்தைகள் தின்பண்டங்கள் குறித்து பேசிய திமுக உறுப்பினர் பூங்கோதை, ஆடிக்காற்றில் அம்மிக்கல்லுடன் அம்மாவின் ஆட்சி பறந்து போய்விடும் என பேசினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், பழைய பழமொழிகள் இக்காலத்திற்கு பொருந்தவே பொருந்தாது. எப்போதும் எங்கள் மம்மி ஆட்சிதான். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இப்படி எல்லாம் பேசுவார்கள் என்று தெரிந்து தான், ஜெயலலிதா அன்றைக்கே அனைவருக்கும் மிக்ஸி கொடுத்துள்ளார், என்றைக்கும் ஜெயலலிதா ஆட்சி தான் என்றார்.
தொடர்ந்து இதுகுறித்து பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆடிக்காற்றும் அடிக்கப்போவதுமில்லை, அம்மிக்கல்லும் பறக்கப்போவதில்லை, ஜெயலலிதா ஆட்சியும் பறக்கப்போவதில்லை என்றார்.