தமிழ்நாடு

திமுக இரண்டாகப் பிளவுபடும் காலம் நெருங்கிவிட்டது- அமைச்சர் ஜெயக்குமார்

Published

on

திமுக பிளவுபடும் காலம் நெருங்கி விட்டது என அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைச்சர் ஜெயகுமார் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பிளவுபடும் காலம் நெருங்கி உள்ளது. திமுக ஆட்சிக்கு வரும் காலம் வெறும் கானல் நீர் போன்றது. இதை மு.க.அழகிரியே உறுதி செய்துள்ளார். வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும்.

கூட்டணி விவகாரத்தைப் பொறுத்த வரையில் யாராக இருந்தாலும் தலைமையின் கீழ் தான் வந்தாக வேண்டும். அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். அதிமுக-வின் முதல்வர் வேட்பாளரை ஏற்போர் உடன் மட்டுமே கூட்டணி என்பதையும் நாங்கள் உறுதி படுத்தியுள்ளோம். தேர்தலை சந்திக்கவே கூட்டணி வைக்கப்படுகிறது. கட்சிக் கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு” எனத் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version