தமிழ்நாடு
‘உங்க சம்பளக் கணக்கை சொல்ல முடியுமா கமல்?’- அதிமுக அமைச்சர் கேள்வி
’நடிகர் கமல்ஹாசன் தனது சம்பளக் கணக்கை மனசாட்சி உடன் வெளியிடத் தயாரா?’ என அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக-வைச் சேர்ந்த தமிழக செய்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் இடையே பேசுகையில், “கமல் எம்.ஜி.ஆர்-ஐ சொந்தம் கொண்டாட நினைக்கிறார். எவ்வித உரிமையும் அவருக்கு இல்லை. எம்ஜிஆர் நடிகராக இருந்தது முதல் அதிமுக-வை தொடங்கியது வரை அவர் உடன் இருந்தது நாங்கள் மட்டுமே.
அரசு அதிகாரிகள் அரசைப் போலவே நடப்பதாக கமல் பேசுகிறார். கமலின் பேச்சு திடீரென வானத்திலிருந்து குதித்தவர் பேசுவது போல் உள்ளது. முதலில் எனது சொத்து கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை விட நான் தயார். அதேபோல் கமலஹாசனும் தனது சம்பளம், சொத்து அறிக்கை, பட ஊதியம் என அத்தனை குறித்தும் மனசாட்சிக்கு உட்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? அவர் சொல்லட்டும். அதற்கு பின்னர் அவர் எங்களைக் கேள்வி கேட்கலாம்” எனப் பேசியுள்ளார்.