செய்திகள்

எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்த 500 ரூபாய்

Published

on

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அதிமுக பிரமுகர் ஒருவர் பொதுமக்களுக்கு தலா 500 வழங்கியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று தமிழகம் முழுவதும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கட்சி தலைவர்கள் அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் பல இடங்களிலும் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் அதிமுகவினரால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மேலும் அங்குள்ள காமியப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அதிமுக பிரமுகரான சேவல் குமார் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி வருடந்தோறும் அன்னதானம் செய்வது வழக்கம். இந்த வருடம் சற்று வித்தியாசமாக சேவல் குமார் என்பவர் தன்னுடைய அதிமுக அலுவலகத்திற்கு அனைவரையும் வரவழைத்து அன்னதானம் வழங்கியும் அனைவருக்கும் தலா 5௦௦ ரூபாய் பணமும் வழங்கினர். இதனால் அந்த கிராம மக்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடினர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள்  அந்த கிராமத்தில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக வைரலாகிக் கொண்டு இருக்கிறது.

Trending

Exit mobile version