Connect with us

தமிழ்நாடு

பாமகவுக்கு ராஜ்யசபா: அதிமுக அமைச்சரின் நம்பிக்கையான பதில்!

Published

on

தேர்தலுக்கு முன்னர் பாமகவுடன் அதிமுக செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது தான் மரபு எனவும் அதனை அதிமுக மீறாது எனவும் பாமகவுக்கு நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளை பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் ரத்தினவேல், மைத்ரேயன், அர்ஜுனன், லக்ஷ்மணன், இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் பலத்தின்படி அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலா 3 மாநிலங்களவை உறுப்பினர்களை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதற்கான வேட்புமணு தாக்கல் நேற்று தொடங்கியதையடுத்து திமுக சார்பில் வேட்பாளர்களாக தொமுச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர், இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒப்பந்தத்தில் இருப்பதை அமல்படுத்துவதுதான் மரபு. எனவே கட்சியும் ஒருங்கிணைப்பாளர்களும் அந்த வழியைத் தான் பின்பற்றுவர். அதிமுக எப்போதும் ஜென்டில் மேனாகவே இருக்கும். அமைச்சரின் இந்தப் பதில், பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.

அவ்வாறு பாமகவுக்கு அதிமுக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கும் பட்சத்தில் அக்கட்சியின் சார்பில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அவர் தர்மபுரி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா15 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!