தமிழ்நாடு

திமுகவை நெருங்கி வரும் அதிமுக: கருத்துக்கணிப்புகள் பொய்யாகுமா?

Published

on

தமிழகத்தில் நடந்த தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் சற்று முன் வரையில் தபால் வாக்குகளில் திமுக முன்னிலை வகித்து வந்தது.

ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என்ன தொடங்கியவுடன் அதிமுகவும் மளமளவென முன்னேறி வருகிறது ஆச்சரியத்தை அளித்துள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் திமுக 190 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் அதிமுக 50 முதல் 60 தொகுதிகளில் தான் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள முடிவுகளின்படி அதிமுக 28 தொகுதிகளிலும் திமுக 32 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவை நெருங்கியே அதிமுகவும் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே ரீதியில் சென்றால் இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சியை பிடிப்பது யார் என்பது இழுபறியாக இருக்கும் என்று கருதப்படுகிறது மட்டுமின்றி அனைத்து கருத்துக்கணிப்புகளும் கருத்து திணிப்புகளாகவே இருந்ததாக தெரிகிறது.

Trending

Exit mobile version