தமிழ்நாடு

டெல்லியில் இருக்கும் குரங்கு, ஸ்டாலின் கையில் அதிமுக: ஆர்.எஸ்.பாரதி தடாலடி பேச்சு!

Published

on

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச ஆரம்பித்தால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது, தடாலடியாக பேசக்கூடியவர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், எம்ஜிஆர் உயிரோடு இருந்திருந்தால் அதிமுகவில் தற்போது நடப்பவற்றை பார்த்து அந்த கட்சியை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பார் என பேசியுள்ளார்.

#image_title

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

அப்போது பேசிய அவர், அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த நாவலரின் நூற்றாண்டு விழாவிற்கு அதிமுக எதுவும் செய்யவில்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து உடன் அவருக்கு சிலை வைக்கப்பட்டது. தற்போது எம்ஜிஆர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் டெல்லியில் இருக்கும் ‘குரங்கு, ஆப்பத்தை பங்குபோடுவதை’ பார்த்திருப்பார். மேலும் நல்லக்கண்ணு, பேராசிரியர் போன்ற தலைவர்களுக்கு கொடுத்த மரியாதையை போல தனக்கு ஸ்டாலின் தான் மரியாதை கொடுப்பார் என்று அதிமுகவை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பார் என்றார் அதிரடியாக.

seithichurul

Trending

Exit mobile version