தமிழ்நாடு

ஏப்ரல் 11ல் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா சசிகலா? பரபரப்பு தகவல்

Published

on

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதையடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகிறது.

அன்றைய தினம் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அவர் அதிமுக பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்படுவர் என்று கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூடியபோது சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகவும் டிடிவி தினகரன் துணை பொதுச் செயலாளராகவும் இருந்ததை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரு தரப்பு வாதமும் முடிந்து தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உள்ளது .

ஏப்ரல் 11ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் 11ம் தேதி தீர்ப்பு ஒருவேளை சசிகலாவுக்கு சாதகமாக வெளியானால் அவர் அதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version