தமிழ்நாடு
அதிமுக எடப்பாடி பழனிசாமிக்கே! பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
![Edappadi - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/Edappadi.jpg)
எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.
![OPS and EPS - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/OPS-and-EPS-1.jpg)
#image_title
இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பின் இறுதி வாதமாக, எடப்பாடி பழனிசாமிக்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தான் அதிகாரம் உண்டு. எனவே அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பின் வாதமாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டதும் பொதுக்குழு உறுப்பினர்களால் தான். அடிப்படை உறுப்பினர்களால் அல்ல. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ளது என்று வாதிடப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது தீர்ப்பை அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம். அதில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து ஓபிஎஸ்-இன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் அதிமுக பொதுக்குழு செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. அதன்படி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நடைமுறைகள் செல்லும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்காக இது இருந்தது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது, ஓபிஎஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.