தமிழ்நாடு

நயினார் நாகேந்திரனின் ‘ஆண்மை’ சர்ச்சை பேச்சு: சென்னை போலீசில் புகார்!

Published

on

நேற்று நடைபெற்ற பாஜக தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிமுகவில் உள்ளவர்கள் ஆண்மை இன்றி இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பாஜக பிரபலம் நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது அதிமுகவினர் சென்னை காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் நேற்று தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து பாஜக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர். இதில் பாஜக தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியபோது, ‘சட்டமன்றத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய ஒருவர்கூட அ.தி.மு.க.வில் இல்லை. அ.தி.மு.க. மக்கள் பிரச்சினைகளை எப்போதும் சட்டமன்றத்தில் பேசுவதில்லை. எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வின் அண்ணாமலை துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

நயினாரின் இந்த பேச்சுக்கு ஏற்கனவே அதிமுக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் நயினார் நாகேந்திரன் மீது அதிமுக புகார் அளித்துள்ளது.

அதிமுக உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அளித்துள்ள இந்த புகாரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து அவதூறாக பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் மீது சென்னை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் தனது பேச்சு குறித்து டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின்போது ஆயி அதிமுக பற்றி என்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என்றும் நான் கூறிய கருத்துக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்றும் போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே எண்ணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version