Connect with us

தமிழ்நாடு

நயினார் நாகேந்திரனின் ‘ஆண்மை’ சர்ச்சை பேச்சு: சென்னை போலீசில் புகார்!

Published

on

நேற்று நடைபெற்ற பாஜக தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிமுகவில் உள்ளவர்கள் ஆண்மை இன்றி இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பாஜக பிரபலம் நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது அதிமுகவினர் சென்னை காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் நேற்று தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து பாஜக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர். இதில் பாஜக தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியபோது, ‘சட்டமன்றத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய ஒருவர்கூட அ.தி.மு.க.வில் இல்லை. அ.தி.மு.க. மக்கள் பிரச்சினைகளை எப்போதும் சட்டமன்றத்தில் பேசுவதில்லை. எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வின் அண்ணாமலை துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

நயினாரின் இந்த பேச்சுக்கு ஏற்கனவே அதிமுக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் நயினார் நாகேந்திரன் மீது அதிமுக புகார் அளித்துள்ளது.

அதிமுக உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அளித்துள்ள இந்த புகாரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து அவதூறாக பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் மீது சென்னை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் தனது பேச்சு குறித்து டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின்போது ஆயி அதிமுக பற்றி என்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என்றும் நான் கூறிய கருத்துக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்றும் போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே எண்ணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா15 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!