தமிழ்நாடு

‘இரட்டை இலைக்கு ஓட்டு போடலைன்னா நல்ல சாவே வராது’- சாபம்விட்ட அதிமுக வேட்பாளர்

Published

on

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் கே.பி.பி.பாஸ்கர் தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போதைய நாமக்கல் எம்.எல்.ஏ-வாக இருக்கும் அவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தொகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில் ஆற்றிய உரை ஒன்று சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட மோனூரில் அதிமுக பரப்புரைக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய கே.பி.பி.பாஸ்கர், ‘நாமக்கல் தொகுதியைச் சேர்ந்தவர்கள் அதிமுகவுக்குத் தான் வாக்களிக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் உங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராது என்பதை சொல்லிக் கொள்கிறேன். ஏன் என்றால் அதிமுக, இந்தத் தொகுதிக்கு அவ்வளவு செய்திருக்கிறது.

அப்படி நல்லது பல செய்த கட்சிக்கு வாக்களிக்காமல் நம்பிக்கை துரோகம் இழைத்த மக்கள் என்ற அவப் பெயரை பெறக் கூடாது என்பதற்காகவே நான் அப்படிப் பேசுகிறேன்.

பல்வேறு நல்ல திட்டங்களை நான் செயல்படுத்தி இருந்தாலும், சில குறைகள் இருக்கத் தான் செய்கின்றின. அடிப்படை வசதிகளை சிலவற்றை இன்னும் நிவர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது. அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்படும்’ என்று கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version