செய்திகள்
அதிமுக வேட்பாளர் திடீர் தற்கொலை…தேர்தல் ஒத்தி வைப்பு…..
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கவுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் 36வது வார்டில் நகர்ப்புற தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அந்த வார்டில் அதிமுக சார்பாக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் திடீரென நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தீவிர பிரச்சாரம் செய்து வந்த நிலையில், ஏன் இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை. எனவே, அந்த வார்டில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.