தமிழ்நாடு
நாளை தேர்தல்: இன்று கட்சி தாவிய அதிமுக வேட்பாளர்!
தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென காட்சி மாறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும் இதற்காக கடந்த சில நாட்களாக வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென இன்று திமுகவுக்கு கட்சித் தாவியுள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி 9வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டவர் பழனிசாமி.
இவர் கடந்த சில நாட்களாக சூறாவளி பிரசாரம் செய்து வந்த நிலையில் இன்று திடீரென திமுக எம்எல்ஏ வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் பழனிச்சாமி கட்சி மாறி உள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து அந்த பகுதி மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.