தமிழ்நாடு

“வாக்கை விற்கமாட்டோம்!”- அதிமுகவினரை விரட்டியடித்த நரிக்குறவ மக்கள்

Published

on

புதுக்கோட்டை மாவட்டம் கூத்தாடிவயல் பகுதியில் அதிக நரிக்குறவ இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு அதிமுக சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு வந்தப் பொது மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் சிலர் பணப் பட்டுவாடா செய்துள்ளனர்.

இதை ஒரு சிலர் வாங்கிச் சென்றனர். ஆனால், கூத்தாடிவயல் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவ இன மக்கள், ‘பணத்துக்காக எங்களது வாக்கை விற்க மாட்டோம்’ என்று அவர்களை விரட்டியடித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் கூறுகையில், ‘அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இந்தப் பகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து பல முறை ஜெயித்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே இல்லை.

எங்களுக்கு ஓட்டுக்குப் பணம் வேண்டாம். எதுவும் வேண்டாம். அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுத்தால் போதும். எங்கள் ஓட்டை யாருக்கும் விற்க மாட்டோம். எங்களின் அடிப்படை வசதிகளை செய்து தருபவர்களுக்கு மட்டுமே இனி ஓட்டு’ என்று கூறுகின்றனர்.

நரிக்குறவ இன மக்கள், அதிமுகவினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது குறித்தான காணொலியும், ‘வாக்கை விற்க மாட்டோம்’ என கோஷமிடும் காணொலியும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version