செய்திகள்
அதிமுக – பாஜக பேச்சுவார்த்தையில் இழுபறி… சுமூக முடிவு எட்டப்படுமா?…
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளிலும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடுகளை ஒதுக்குவது ஆகிய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிமுகவும், பாஜகவும் 2 நாட்களாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அதிமுகவை நயினார் நாகேந்திரன் விமர்சித்தது சமீபத்தில் சர்ச்சையான நிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதில், பாஜக அதிக இடங்களை கேட்கிறது. ஆனால், அதிமுக அதை கொடுக்க மறுக்கிறது. எனவே, பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. மாநகராட்சிகளில் அதிக இடங்களை பாஜக கேட்பதால் இந்த இழிபறி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விரைவில் இதற்கு சுமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.