தமிழ்நாடு
ஈபிஎஸ்-க்கு எதிராக பேசிக்கொண்டிருந்தபோதே கட்சியில் இருந்து நீக்கப்பட அதிமுக பிரமுகர்!
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கும்போதே அதிமுக பிரமுகர் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு உள்ளது என்றும் குறிப்பாக சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்வது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியதிலிருந்து கட்சியில் சில தலைவர்கள் இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஊடகமொன்றுக்கு அதிமுக சிறுபான்மை நலத்துறை துணை செயலாளர் பஷீர் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவரது அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டதாகவும் அதுமட்டுமின்றி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பஷீர் சிஏஏ சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கடுமையாக அவர் பேசிக் கொண்டிருந்தார். அவர் விமர்சனம் செய்து பேட்டி அளித்து கொண்டிருக்கும்போதே கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிக்கை வெளிவந்ததாக செய்தியாளர்கள் அவரிடம் தெரிவித்தனர்.
தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தியாளர்கள் கூறியதும் அவரது குரல் திடீரென மாறியது. அதன் பின்னர் சிறிதளவு சிறிது சமாளித்துக் கொண்டு தன்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை அதை பற்றிதான் கவலை பட போவதில்லை என்று சமாளித்து பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.