தமிழ்நாடு

நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தை: அதிமுக-பாஜக தொகுதி உடன்பாடு

Published

on

அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை இரவு 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணிக்கு முடிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நேற்றிரவு சென்னை வந்த அமித்ஷாவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தேனி தொகுதி எம்பி இரவீந்திரநாத் குமார் ஆகியோர் அதிமுக தரப்பிலும், பாஜக தரப்பில் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், சிடி ரவி மற்றும் சந்தோஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நடந்தது என்பதும் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பேச்சுவார்த்தையும் நிறைந்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார் இந்த நிலையில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்ததாகவும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

அனேகமாக இன்று அதிமுக தலைமை பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version