தமிழ்நாடு
நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தை: அதிமுக-பாஜக தொகுதி உடன்பாடு
அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை இரவு 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு ஒரு மணிக்கு முடிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்றிரவு சென்னை வந்த அமித்ஷாவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தேனி தொகுதி எம்பி இரவீந்திரநாத் குமார் ஆகியோர் அதிமுக தரப்பிலும், பாஜக தரப்பில் எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், சிடி ரவி மற்றும் சந்தோஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நடந்தது என்பதும் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் பேச்சுவார்த்தையும் நிறைந்ததாகவும் தெரிகிறது.
அனேகமாக இன்று அதிமுக தலைமை பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.