தமிழ்நாடு
கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும்.. அமைச்சர் பொன்முடி!
![ponmudi - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/06/ponmudi.jpg)
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாகத் தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. எனவே கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி இன்று உயர் கல்வித் துறை அமைச்சரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர்.
Read More: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது எப்போது? அமைச்சர்கள் பதில்!
அதற்குப் பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என கூறினார்.
மேலும் தமிழ்நாட்டில் திட்டமிட்ட படி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் எனவும் தெரிவித்தார்.