தமிழ்நாடு

கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு

Published

on

சிவகங்கை தொகுதி மக்களவை எம்பி கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு மீதான தீர்ப்பு இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

263 சீனர்களுக்கு முறைகேடான முறையில் விசா வாங்கி கொடுத்ததாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து அவரது இல்லத்தில் நடந்த ரெய்டில் சில ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்பட்டது.

மேலும் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது செய்யப்பட்ட நிலையில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜூன் மூன்றாம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version