/srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77

Warning: Trying to access array offset on value of type bool in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77
" width="36" height="36">

சினிமா செய்திகள்

’ஆதித்ய வர்மா’ நாயகிக்கு கொரோனா… அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆக மறுப்பு!

Published

on

துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா படத்தின் நாயகி பனிடா சந்துவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பனிடா ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர். இவர் சமீபத்தில் லண்டன் சென்றுவிட்டு நண்பர் ஒருவருடன் இணைந்து இந்தியா திரும்பி உள்ளார். பனிடாவின் நண்பருக்கு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவர் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், கொரோனா உறுதி ஆன போதும் புதிய உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிய கொல்கத்தாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை வாசலில் நின்ற ஆம்புலன்ஸில் இருந்து இறங்கக் கூட மறத்துவிட்டாராம் பனிடா. அந்த அரசு மருத்துவமனையில் சுத்தம், சுகாதாரம் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்பதால் பனிடா மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் தனது சுய விருப்பத்தின் அடிப்படையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி ஆகிக்கொள்வதாக எழுதிக் கொடுத்துவிட்டு தனியார் மருத்துவமனைக்கு பனிடா சென்றுவிட்டார்.

Trending

Exit mobile version