தமிழ்நாடு

முதுகுளத்தூர் மணிகண்டன் இறப்புக்கு என்ன காரணம்? ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம்!

Published

on

முதுகுளத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென மர்மமான முறையில் அவர் மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது என்பதும் இரண்டு முறை அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மணிகண்டன் மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என பாஜக உள்பட ஒரு சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் மணிகண்டன் மரணம் அடைந்தது எப்படி என்பது குறித்து ஏடிஜிபி தாமரைக்கண்ணன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.

கல்லூரி மாணவர் மணிகண்டன் விஷமருந்தி தான் உயிரிழந்துள்ளார் என்றும் காவல்துறையினர் தாக்கியதில் மணிகண்டன் உயிரிழக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ராமநாதபுரத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் வீட்டிலிருந்து விஷ பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை அடித்ததால் தான் மணிகண்டன் உயிர் இறந்ததாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் இந்த தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version