இந்தியா
இது எனக்கு எதிரான தாக்குதல் அல்ல, இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்.. அதானியின் 413 பக்க விளக்கம்!
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பர்க் என்ற நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக அதானி குழுமங்களின் பங்குகள் படும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன என்பதும் கடந்த வாரம் புதன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில் மட்டும் அதானி குழுமங்களை சேர்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் பயங்கரமாக சரிந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் ஹிண்டர்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அதானி குழுமம், இந்த தாக்குதல் அதானி குழுமத்திற்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல இந்தியா மற்றும் அதன் வளர்ச்சி மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்டு தாக்குதல் என குறிப்பிட்டுள்ளது.
#image_titleஅதானி குழுமம் வெளியிட்டுள்ள 413 பக்க அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாக இதை பார்க்கவில்லை, மாறாக இந்தியா மீதும், இந்திய சுதந்திரம் மீதும், ஒற்றுமை மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீதும் இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டர்பர்க் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் பொய்யானது என்றும் இந்த தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் மற்ற உள்நோக்கத்துடன் கூடிய பொய்யான குற்றச்சாட்டுகளின் தொகுப்பு என்றும் அதானி குடும்பத்தின் 413 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வளர்ச்சி முன் எப்போதும் இல்லாத வகையில் உள்ளது. அதே போல் அதானி குழுமமும் வளர்ச்சி அடைந்திருக்கும் வேளையில் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது ஹிண்டர்பர்க்கின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஹிண்டர்பர்க் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை வெளியிட்டதற்கான காரணத்தை கூறவில்லை என்றும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கை அந்நிய செலவாணி சட்டங்களின் மீறலாகும் என்றும் எனவே அந்நிறுவனத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதானி குழுமத்தின் 413 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிண்டர்பர்க் நிறுவனம் எழுப்பிய 88 கேள்விகளில் 65 கேள்விக்கு உரிய அமைப்புகளிடம் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் மீதமுள்ள 23 கேள்விகளில் 18 கேள்விகள் பங்குதாரர்கள் மற்றும் அதானி குடும்பத்தை சாராத நிறுவனங்கள் பற்றியது என்றும் அதனை அடுத்து உள்ள ஐந்து கேள்விகள் அடிப்படை அற்ற கற்பனையான டேட்டாக்களை கொண்ட குற்றச்சாட்டுகள் என்பதால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதானி குழுமத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.