விமர்சனம்
ஜெயம் ரவியின் அடங்கமறு விமர்சனம்!
மக்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், சுயநலத்திற்காக சில விசயங்கள் செய்யும் போது போலீசார் ஒபே தி ஆடர் என்ற விதிமுறையை மீறி அடங்கமறுக்கலாம் என்பதே அடங்கமறு படத்தின் ஆக்ரோஷ கதை.
அடங்கமறு எப்படி இருக்கு?
அன்பான பெற்றோர், அண்ணன், அண்ணி, அண்ணன் குழந்தைகள் என சந்தோஷமான சூழ்நிலையில் வாழும் ஜெயம் ரவி புதிதாக கிரைம் ப்ராஞ்சில் சப் இன்ஸ்பெக்டராக வேலைக்கு சேர்கிறார். ஒபே தி ஆடர் என அவர் வேலை செய்வதை தடுக்கின்றனர் மேலதிகாரிகள்.
மேலும் ஒரு பெண்ணின் கற்பழிப்பு கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ஜெயம் ரவியிடம் வருகிறது. குற்றவாளிகளை பிடிக்க நெருங்கும் சமயத்தில் விசாரனை வழக்கு அவரிடம் இருந்து விடுவிக்கப்படுகிறது. இதனால் மேலதிகாரிகளின் உத்தரவை மீறி அந்த குற்றவாளிகளை ஜெயம் ரவி கைது செய்கிறார்.
ஆனால், கைது செய்த 15வது நிமிடத்திலேயே அவர்கள் செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வருகின்றனர். நல்ல செல்வாக்கும், அதிகாரமும் படைத்தவர்கள் அந்த குற்றவாளிகள். எந்த ஆதாரமும் இல்லை என்று மேலதிகாரிகளால் அந்த குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். அன்று இரவே ஜெயம் ரவி வீட்டில் உள்ள ஒரு குழந்தையை தவிர அனைவரும் கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர். கொலை செய்தவர்களை எப்படி ஜெயம் ரவி பழிவாங்குகிறார் என்பது தான் மீதிக்கதை.
சமீப காலமாக தமிழ் சினிமாவில் போலீஸ் கதாப்பாத்திரம் என்றாலே ஜெயம் ரவிக்கு சரியாக பொருந்திவிடுகிறது. தனி ஒருவன், போகன் ஆகிய படத்திற்கு பின் இந்த படத்திலும் ஜெயம் ரவி போலீசாக நடித்துள்ளார். குடும்பபாங்கான சென்டிமென்ட் கலந்த பின்னணியில் படம் ஜெயம் ரவிக்கு நன்றாகவே கைக்கொடுக்கும். அதைப்போலவே இந்த படத்திலும் நடந்திருக்கிறது. வேலையை நேசித்து நியாமாக நடக்க நினைக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு அவர்களது மேலதிகாரிகளே வில்லனாக அமைந்துவிடுகின்றனர்.
தன் கடமை உணர்ச்சியால் குடும்பத்தை பறிகொடுக்கிறார் ஜெயம் ரவி. அதன்பின் போலீஸ் புத்தியுடன் தன் குடும்பத்தை அழித்தவர்களை எப்படி வேட்டையாடுகிறார் என்பதை இக்காலக்கட்டத்துக்கு ஏற்றவாரு புதுப் புது காட்சிகள் கொடுத்து ரசிக்க வைக்கிறார் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். இந்த படமும் ஜெயம் ரவியின் வெற்றி படங்களின் பட்டியலில் ஒரு தனி சிறப்பை பெறும் என்பது உறுதி.
ஜெயம் ரவிக்கு காதலியாக ராஷி கண்ணா, படத்தில் ஒரு பாடல் மற்றும் ஒரு சில காட்சிகள் வந்துபோகிறார். படத்தின் இடைவேளைக்கு பிறகு ஒரே ஒரு காட்சியில் தான் அவர் வருவார்.
படத்தில் வில்லன் என தனியாக யாரையும் குறிக்கவில்லை ஜெயம் ரவிக்கு இன்ஸ்பெக்டராக இருக்கும் மைம் கோபி, இணை ஆய்வாளர் சம்பத் ஆகியோர் ரவியின் கடமை உணர்ச்சிக்கும், பதவிக்கும் வில்லனாக அமைகின்றனர்.
அவர்களுக்கு அடுத்து நான்கு இளைஞர்களும், அவர்களின் செல்வாக்கு மிக்க அப்பாக்களும் ரவிக்கு வில்லனாக அமைகின்றனர். ஆக மொத்தம் இந்த படத்தில் ரவிக்கு 10 வில்லன்கள். அந்த பெண்ணை கற்பழித்து, தனது குடும்பத்தை கொன்ற அந்த நான்கு பேரையும் எப்படி அவர்களது அப்பாக்கள் மூலமே ரவி கொல்கிறார் என்பது தான் கதையின் ஹைலைட். அதிலும் முற்றிலும் டெக்னிகல் விஷயங்களை பயன்படுத்தி மிரட்டியுள்ளனர்.
தனி ஒருவன், போகன் படங்களை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு மீண்டும் காக்கி யூனிபார்ம் பக்காவாக செட்டாகியுள்ளது. அடங்கமறு ரசிகர்கள் மனதில் நிச்சயம் ஆட்சி செய்யும்.
அடங்கமறு சினி ரேட்டிங்: 3.75/5