தமிழ்நாடு

நடிகை தற்கொலை முயற்சி வழக்கு: நடமாடும் நகைக்கடை ஹரிநாடார் கைது!

Published

on

நடிகை ஒருவர் தற்கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் பிரபல அரசியல்வாதியும் நடமாடும் நகைக்கடை என்று கூறப்படுபவருமான ஹரிநாடார் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி என்பவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது தன்னை சீமான், ஹரிநாடார் உள்பட ஒரு சிலர் மிரட்டுவதாகவும் அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் வாக்குமூலம் கொடுத்தார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹரிநாடார் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற திருவான்மியூர் போலீசார் அவரை நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இதனை அடுத்து விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சீமான் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version