சினிமா செய்திகள்

நடிகர் விஜய்சேதுபதி மீது திருநங்கைகள் புகார்

Published

on

விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து கடந்த வாரம் வெளியான சூப்பர் டீலக்ஸ் கலவையான விமர்சனங்களுடன் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில், திருநங்கை கேரக்டரில் நடித்துள்ள விஜய்சேதுபதி, ஒரு குழந்தைக்கு அப்பாவாகி விட்ட பின்னர், திருநங்கையாக மாறியிருப்பதாக படமாக்கப்பட்டுள்ளது.

மேலும், படத்தில் வரும் ஒரு காட்சியில், திருநங்கைகள் குழந்தைகளை திருடுவதாக வசனம் பேசியுள்ளார்.

இந்த வசனத்திற்காக விஜய்சேதுபதி மீது திருநங்கைகள் புகார் அளித்துள்ளனர். அவரை கைது செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருநங்கைகள் ரேவதி, பிரேமா, கல்கி பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர், விஜய்சேதுபதி மீதிருந்த மரியாதை இந்த படத்தின் மூலம் முற்றிலும் போய்விட்டது என்றனர்.

இந்த கதையை கேட்டுவிட்டு, அவர் எப்படி நடிக்க ஒப்புக் கொண்டார், இந்த படம் திருநங்கைகளின் மனங்களை புண்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மக்கள் செல்வன் என்ன பதில் கூற உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version