சினிமா செய்திகள்

‘கங்கனாவுக்கு தான் என்னுடன் பிரச்சினை’.. எனக்கு இல்லை.. டாப்ஸி!

Published

on

நடிகை கங்கனாவுக்கு தான் என்னுடன் பிரச்சினை, எனக்கு இல்லை என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘ஆடுகளம்’ படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை டாப்ஸி தற்பொழுது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கதைக்கும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கக்கூடிய வகையில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை கங்கனா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள டாப்ஸி, ‘கங்கனாவை ஒரு வேளை நேரில் பார்த்தால் நான் வணக்கம் சொல்வேன். வேறு எதுவும் பேச மாட்டேன். கங்கனாவுக்கு தான் என்னுடன் பிரச்சனையே தவிர எனக்கு அவருடன் எந்த வருத்தமும் கிடையாது.

அது அவருடைய விருப்பம். அவர் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் நான் பாராட்டாகவே எடுத்துக் கொள்வேன்’ என்று டாப்ஸி மனம் திறந்து பேசி உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் கங்கனாவுக்கும் டாப்ஸிக்கும் இடையில் கடுமையான போர் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கனா தற்பொழுது தமிழில் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். டாப்ஸி தற்போது பாலிவுட்டில் படங்கள் நடித்து வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version