தமிழ்நாடு

பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொண்ட முதல் தமிழ் நடிகை!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி இன்றுமுதல் செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் நடிகை ஒருவர் பூஸ்டர் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்தி கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இன்று முதல் நாடு முழுவதும் தகுதி உள்ள நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் சென்னையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பூசியை திரையுலக பிரபலங்கள் பலர் செலுத்தி அதனை புகைப்படங்களுடன் வெளியிட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகை ஸ்ரீபிரியா தற்போது தான் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார். இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய முதல் நடிகை ஸ்ரீபிரியா தான் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

 

Trending

Exit mobile version