தமிழ்நாடு
2 தொழிலதிபர்கள் மீது நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார்
இரண்டு தொழில் அதிபர்கள் மீது நடிகை சினேகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக கடந்த 2000 ஆண்டுகளில் இருந்தவர் நடிகை சினேகா என்பதும் கமல்ஹாசன், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகை சினேகா 2 தொழிலதிபர்கள் மீது சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் இரண்டு தொழிலதிபர்கள் ரூபாய் 26 லட்சம் மோசடி செய்ததாகவும் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று கூறியதாகவும் அதை நம்பி முதலீடு செய்ததாகவும் தற்போது வட்டி கேட்டதற்கு தன்னை மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார்
இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு தொழிலதிபர் மீது நடிகை சினேகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது