சினிமா
நடிகை ஸ்ரேயா அதிரடி விளக்கம் நான் அரசியலுக்குப் பொருத்தமானவள் இல்லை
நடிகை ஸ்ரேயா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘நரகாசுரன்’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.
நரகாசுரன் படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இது எனது வாழ்க்கையில் முக்கியப் படம். முதலில் நடிக்கத் தயங்கினேன். டைரக்டர் கார்த்திக் நரேன் முழுக் கதையையும் அனுப்பினார். அதைப் படித்ததும் பிடித்துப்போய் ஒப்புக்கொண்டேன். நடிப்புப் பயிற்சி எடுத்து இதில் நடித்தேன்.’’ என்றார். இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது குறித்து ஸ்ரேயா கூறுகையில், ரஜினிகாந்தை வெகுவாகப் புகழ்ந்தார். மேலும் அவரைப் போன்ற ஒரு எளிமையான மனிதரைப் பார்த்ததில்லை என்றும் ஸ்ரேயா தெரிவித்தார். லைட்மேன் முதல் பெரிய நடிகர்–நடிகைகள் உள்பட எல்லோரையும் ஒரே மாதிரி மதிப்பார். பணம், புகழ், சேர்ந்தும் எளிமையாகப் பழகினார். இதுமாதிரி ஒருவரை என் வாழ்நாளில் சந்தித்தது இல்லை.
அவரிடம் நிறைய விஷயங்கள் கற்றேன். ஆன்மிகத்தில் எனக்கு ஈடுபாடு இருக்கிறது. யோகா, தியானம் செய்கிறேன். எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறேன். விஜயசாந்தி, ஜெயப்பிரதா போன்றவர்கள் அரசியலுக்கு வந்துள்ளதைப் போல் நீங்களும் அரசியலில் ஈடுபடுவீர்களா? என்று என்னிடம் கேட்கப்படுகிறது.
அத்துடன் அரசியல் குறித்த கேள்விக்கு, பதிலளித்துப் பேசுகையில், “அரசியலுக்கு வர நெளிவு சுளிவுகளும் சூட்சுமங்களும் வேண்டும். எனக்கு அவை இல்லை. எனவே நான் அரசியலுக்குப் பொருத்தம் இல்லை என்று நினைக்கிறேன். நடனம் சம்பந்தமான படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
நரகாசுரன் படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இது எனது வாழ்க்கையில் முக்கியப் படம். முதலில் நடிக்கத் தயங்கினேன். டைரக்டர் கார்த்திக் நரேன் முழுக் கதையையும் அனுப்பினார். அதைப் படித்ததும் பிடித்துப்போய் ஒப்புக்கொண்டேன். நடிப்புப் பயிற்சி எடுத்து இதில் நடித்தேன்.’’ என்றார். இவ்வாறு அவர் கூறினார்.
5, 6 பேர் பயணத்தில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அது சஸ்பென்ஸ், திகிலாக இருக்கும். ஊட்டியில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது’’ என்றார்.