சினிமா செய்திகள்
திருப்பதி கோவில் முன் முத்தம்: விஜய் பட ஹீரோயினிக்கு கண்டனம்!
திருப்பதி கோவிலின் கோபுரத்தின் முன்பு நின்று கொண்டு கணவருடன் முத்தக்காட்சியில் ஈடுபட்ட விஜய் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவருக்கு கண்டனங்கள் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ உள்பட பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா சரண். இவர் தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா சரண், கணவருடன் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் இணைந்து பல கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்துள்ளார் என்பதும், அந்த பதிவுகள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையில் திருப்பதி சென்ற அவர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலுக்கு வெளியே கோபுரத்தின் முன் நின்று கொண்டிருந்த போது அவரது கணவர் முத்தமிட்டவாறு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாமி கும்பிட வரும் நேரத்தில் இது மாதிரி புகைப்படங்களை எடுத்துக் கொள்வது சரியா என அவரை விமர்சனம் செய்த ரசிகர்கள், திருப்பதி ஏழுமலையானின் புனிதத்தை கெடுத்து விட்டதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.