சினிமா செய்திகள்

நடிகை ஸ்ரேயாவின் குழந்தை பெயர் இதுதான்: அவரே வெளியிட்ட தகவல்!

Published

on

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரேயா சரண் கடந்த சில மாதங்களுக்கு முன்பே குழந்தை பெற்று விட்டார் என்றும் குழந்தை பிறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன பிறகு சமீபத்தில் அவர் தனக்கு குழந்தை பிறந்ததை வெளியுலகத்திற்கு தெரிவித்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். ஸ்ரேயா சரண் கர்ப்பமானது கூட தெரியாமல் இருந்த ரசிகர்கள் திடீரென அவருக்கு குழந்தை பிறந்து ஒன்பது மாதம் ஆகி விட்டதாக வெளியான தகவலை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் தனது குழந்தைக்கு ராதா என பெயரிட்டு உள்ளதாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது என்னுடைய மகளுக்கு ராதா எனப் பெயரிட்டுள்ளேன் என்றும், நான் குழந்தை பெற்று 9 மாதங்கள் ஆகின்றது என்றும், இனிமேலும் அவளை ரகசியமாக வைத்திருக்க எதுவும் இல்லை என்றும், எனவேதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எனது மகள் ராதா ஏற்கனவே பல நாடுகள் சுற்றி விட்டாள் என்றும், அவள் என்னை போலவே டிராவலை விரும்புபவள் என்பதை அறிந்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதே இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும் ராதா எனது மகள் ராதா குழந்தையாக இருந்தாலும் அவள் என் சிறந்த தோழி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது மகள் ராதா பார்சிலோனாவில் உள்ள மருத்துவமனையில் பிறந்ததாகவும் குழந்தை பிறந்த உடனே ராதா என்ற பெயர் தான் அவளுக்கு வைக்க வேண்டுமென நாங்கள் இருவருமே சேர்ந்து முடிவு எடுப்போம் என்றும் இதுதான் ஒரு குடும்பத்தை தொடங்குவதற்கு சரியான நேரம் என திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொண்டோம் என்றும் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்தது என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள ஸ்ரேயா சரண் மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் தமிழ் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version