தமிழ்நாடு

ரூ.10 கோடி இழப்பீடு: முன்னாள் அமைச்சர் மீது தமிழ் நடிகை வழக்கு!

Published

on

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி ஏற்கனவே பாலியல் புகார் குறித்த வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தற்போது ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் என்றும், நான்கு முறை கர்ப்பமாக்கி விட்டு அந்த கர்ப்பத்தை வலுக்கட்டாயமாக கலைக்க சொன்னார் என்றும் நடிகை சாந்தினி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பின் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகை சாந்தினி மீண்டும் ஒரு வழக்கை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதால் அதற்கு நஷ்ட ஈடாக ரூ 10 கோடி தரவேண்டும் என்று வழக்கு பதிவு செய்து உள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சனை ஏற்பட்டால் இழப்பீடு பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடிகை சாந்தினி இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version