சினிமா செய்திகள்

நடிகர் ஷாம் திடீர் கைது.. பின்னணி என்ன?

Published

on

சென்னை நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் சட்டவிரோதமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் நடிகர் ஷாமுக்கு சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில், சட்டவிரோதமாகச் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்றிரவு காவல்துறையினர் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் சோதனை செய்த போது, சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த பணம், சீட்டு கட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பல நாட்களாக அடிக்கடி இங்கு நடிகர்கள், இயக்குநர்கள், தொழில் அதிபர்கள் பலர் இது போன்று சட்டவிரோதமாகச் சீட்டு விளையாட்டின் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை நடிகர் ஷாம் சூதாட்ட கிளப் போல் நடத்திவந்ததும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே காவல்துறைக்கு இந்த சட்டவிரோத சூதாட்டம் குறித்த தகவல் தெரிந்தும், காவல்துறை கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டும் உள்ளது. கைது செய்யப்பட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரும் காவல்நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

seithichurul

Trending

Exit mobile version