சினிமா செய்திகள்
தமிழ், மலையாள நடிகை கொரோனாவுக்கு பலி: முதல்வர் இரங்கல்!
தமிழ் மற்றும் மலையாள நடிகை ஒருவர் புற்றுநோய் மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
தமிழில் வெளியான ’பச்சை என்னும் காத்து’ என்ற திரைப்படத்திலும் ஒரு சில மலையாளப் படத்திலும் நடித்தவர் நடிகை சரண்யா சசி. 35 வயதான இவருக்கு இவர் தமிழ் மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மலையாள திரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த நேரத்தில் திடீரென அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அடுத்தடுத்து ஒருசில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று இரவு காலமானார். இதனை அவரது தோழியும் நடிகையுமான சீமா நாயர் என்பவர் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து சரண்யா சசியின் மறைவுக்கு தமிழ் மற்றும் கேரள திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.