Connect with us

சினிமா செய்திகள்

தமிழ், மலையாள நடிகை கொரோனாவுக்கு பலி: முதல்வர் இரங்கல்!

Published

on

Us corona death toll overtakes world war 2

தமிழ் மற்றும் மலையாள நடிகை ஒருவர் புற்றுநோய் மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

தமிழில் வெளியான ’பச்சை என்னும் காத்து’ என்ற திரைப்படத்திலும் ஒரு சில மலையாளப் படத்திலும் நடித்தவர் நடிகை சரண்யா சசி. 35 வயதான இவருக்கு இவர் தமிழ் மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மலையாள திரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த நேரத்தில் திடீரென அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அடுத்தடுத்து ஒருசில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

சரண்யா சசியின் மருத்துவ செலவுக்கு மோகன்லால் உள்பட மலையாள நடிகர்கள் பலர் உதவி செய்தனர். இந்தநிலையில் சரண்யா சசியின் தாயாரும் சகோதரரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து சரண்யா சசிக்கும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அவருக்கு கொரோனாவுக்கும் சேர்த்து சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று இரவு காலமானார். இதனை அவரது தோழியும் நடிகையுமான சீமா நாயர் என்பவர் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து சரண்யா சசியின் மறைவுக்கு தமிழ் மற்றும் கேரள திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் நடிகை சசி தன்னம்பிக்கையுடன் நோயை எதிர்த்துப் போராடினார். சமூகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு மிகவும அபாரம். கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது நடிகை சசி தனது மருத்துவ செலவில்இருந்து ஒரு தொகையை மக்களுக்கு ஒதுக்கி உதவி செய்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul
தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்22 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்22 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!