சினிமா

நடிப்புக்கு பிரேக்!…. அதிர்ச்சி கொடுத்த நடிகை சமந்தா…..

Published

on

தமிழில் பாணா காத்தாடி, விண்ணைத்தாண்டி வருவாயா படங்கள் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சமந்தா.

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனின் மகன் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். ஆனால் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது அழகுக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், மொட்டை மாடி விவசாயம், ஃபிட்னஸ் போன்ற வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார். அது வைரலும் ஆகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘11 வருடங்களாக இடைவெளியின்றி நடித்து வருகிறேன். எனவே நடிப்பிற்கு பிரேக் விட நினைக்கிறேன்’ என தெரிவித்து ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். சமந்தாவின் கையில் தற்போது புதிய படங்கள் எதுவுமில்லை. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் மட்டும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

seithichurul

Trending

Exit mobile version