சினிமா
அடக்கடவுளே! போலீஸ் ஸ்டேஷன் அருகே துப்பாக்கிச்சூடு; பிரபல நடிகை பரிதாப பலி
போலீஸ் ஸ்டேஷன் அருகே புதன்கிழமையான இன்று பிரபல நடிகையை துப்பாக்கியால் சுட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை ரியா குமரி. இவரது கணவர் பிரகாஷ் குமார் ஒரு பிரபல சினிமா தயாரிப்பாளர். ரியா குமாரி மற்றும் பிரகாஷ் குமார் குடும்பத்துடன் காரில் கவுரா தேசிய நெடுஞ்சாலை வழியாக கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பாக்னன் காவல் நிலையப் பகுதியில் உள்ள மகிஸ்ரேகா அருகே சென்றபோது நீண்ட நேர பயணத்தால், சற்று ஓய்வெடுத்துக்கொள்ள நெடுஞ்சாலை ஓரமாக பிரகாஷ் குமார் காரை நிறுத்தியுள்ளார். அப்போது, திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கி, அவரது பொருட்களை கொள்ளையடிக்க முயன்றனர்.
கணவனை மீட்க நடிகை ரியா குமாரி முயன்றுள்ளார். அப்போது, அவர்கள் நடிகையை திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
பிரகாஷ் குமார் தனது மனைவியை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சுமார் 3 கி.மீ. தூரம் வரை குல்காச்சியா-பிர்டாலாவில் நெடுஞ்சாலையில் உதவிக் கேட்டு கெஞ்சியுள்ளார். அப்போது அங்கு தென்பட்ட சில உள்ளூர் மக்களிடம் நடந்ததை பிரகாஷ் குமார் விளக்கிய நிலையில், ரியா குமாரியை உலுபெரியாவில் உள்ள SSC மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததும் தயாரிப்பாளர் பிரகாஷ் குமார் உறைந்து போய் விட்டார்.
வங்காள நடிகையான ரியா குமாரி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் சினிமா துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.