சினிமா செய்திகள்
முதல் இரவில் என்ன செய்தீர்கள்: நடிகையின் கேள்வியால் அதிர்ந்த செய்தியாளர்!
![rasitha ram - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/rasitha-ram.jpg)
முதலிரவில் நீங்கள் என்ன செய்தீர்கள்? என செய்தியாளர்கள் ஒருவரிடம் நடிகை ஒருவர் கேள்வி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல கன்னட நடிகை ரசிதா ராம் என்பவர் நடித்துள்ள ’லவ் யூ ரச்சு’ என்ற திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்து உள்ளதாக கூறப்பட்டு வந்ததை அடுத்து நிருபர் ஒருவர் உணர்ச்சிகரமான காட்சிகளில் நடித்த அனுபவம் குறித்து கேள்வி எழுப்பினார்.
உடனே எதிர் கேள்வி கேட்ட நடிகை ரசிதா, ‘நீங்கள் உங்கள் முதலிரவின் போது என்ன செய்தீர்கள்? என்று கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பதில் சொல்ல திணறிக் கொண்டிருந்த போது, ‘இங்கே நிறைய பேர் கல்யாணம் ஆனவங்க இருக்கிறீங்க, யாரையும் சங்கடப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. பொதுவாக கல்யாணத்திற்கு பிறகு எல்லோரும் காதல் செய்வார்கள். முதலிரவில் இருந்து தான் அந்த காதல் ஆரம்பிக்கும். அது போன்ற ஒரு கதை அம்சம் தான் இந்த படம். எனக்கு இந்த படத்தில் நடிக்கும் போது எந்தவித மான உணர்ச்சியும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
நடிகையின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கன்னட கிராந்தி தளம் கூறியபோது முதலிரவு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகை ரசிதாராம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் அவர் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.