சினிமா செய்திகள்

கணவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை ராதா: என்ன காரணம்?

Published

on

நடிகர் முரளி, வடிவேலு நடித்த ’சுந்தரா டிராவல்ஸ்’ என்ற படத்தின் நாயகியாக நடித்திருந்த நடிகை ராதா, எஸ்ஐ வசந்த ராஜா என்பவர் மீது புகார் கொடுத்து இருந்த நிலையில் தற்போது அவர் தனது புகாரை வாபஸ் பெற்று உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் தனது கணவர் தன்னிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதால் புகாரை வாபஸ் பெற்று உள்ளதாக இன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதா ஏற்கனவே தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பதும் அதன் பின்னர் எண்ணூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார் என்று நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த ஓராண்டாக சாலிகிராமம் பகுதியில் தம்பதிகளாக இருந்து வந்த நிலையில் ராதாவை வசந்தராஜா சந்தேகம் கொண்டதால் அடிக்கடி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் வசந்தராஜா ராதாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ராதா நேற்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார். இந்த புகார் மீது விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் இன்று அவர் திடீரென தனது புகாரை வாபஸ் பெற்றார். தன்னுடைய கணவர் மனம் திருந்தி தன்னிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதாகவும் அதனால் புகாரை வாபஸ் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version