சினிமா செய்திகள்

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஷூட்டிங்-ல் முளைத்த காதல்… நிரஞ்சனி அகத்தியனுக்கு திருமணம்!

Published

on

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் தேசிங் பெரியசாமி. அதே படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த நிரஞ்சனி அகத்தியனுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இயக்குநர் அகத்தியனின் மூன்றாவது மகள் நிரஞ்சனி. நிரஞ்சனியின் முதல் அக்கா ‘குக்கு வித் கோமாளி’ கனி மற்றும் இரண்டாவது அக்கா நடிகை விஜயலட்சுமி ஆவர். முதல் படத்திலேயே இயக்குநர் உடன் ஏற்பட்ட காதலால் நிரஞ்சனிக்கு வருகிற பிப்ரவரி 25-ம் தேதி இரு குடும்பத்தாரும் இணைந்து திருமணம் செய்து வைக்க உள்ளதாக முடிவு செய்துள்ளனர்.

இயக்குநர் அகத்தியனின் மூன்று மகள்களும் இயக்குநர்களைத் தான் திருமணம் செய்துள்ளனர். கனியின் கணவர் திரு ஒரு இயக்குநர் தான். விஜயலட்சுமியின் கணவர் ஃபெரோஸ் ஒரு இயக்குநர். தற்போது மூன்றாவதாக வரப்போகும் மருமகன் தேசிங் பெரியசாமியும் ஒரு இயக்குநர் என்பதால் குடும்பத்தார் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக மணப்பெண் நிரஞ்சனி தெரிவித்துள்ளார்.

இவர்களது காதல் திருமணத்தில் முடிந்துள்ளது என்பதை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் நாயகன் துல்கர் சல்மானுக்குத் தான் முதலில் தெரிவித்தார்களாம்.

seithichurul

Trending

Exit mobile version