சினிமா

இரட்டை பிள்ளைகளின் பெயரை அறிவித்த நயன்தாரா!

Published

on

நடிகை நயன்தாரா தன் குழந்தைகளின் பெயர்களை முதல் முறையாகத் தெரிவித்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை நயன்தாரா. இவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நண்பர்கள், உறவினர்கள் சூழ திருமணம் நடந்தது. திருமணமான நான்கே மாதத்தில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது என்பதை சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர். இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

மேலும், இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்ட விவகாரமும் சர்ச்சையானது. அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்ட செய்தியை விசாரணையில் தெரியப்படுத்தினர். ஒவ்வொரு முறையும் குழந்தைகள் தொடர்பான புகைப்படங்களை பதிவிடும்பொழுது உயிர், உலகம் என்று விக்னேஷ் சிவன் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா முதல் முறையாக பொதுவெளியில் தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ளார். ஒரு குழந்தைக்கு ‘உயிர் ருத்ரேனில் என் சிவன்’ என்றும் இன்னொரு குழந்தைக்கு ‘தெய்வேக் என் சிவன்’ எனவும் பெயரிட்டுள்ளனர். குழந்தைகளின் பெயர்கள் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் தெரிவித்து, தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா தற்பொழுது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பிற்காக அவர் சமீபத்தில் மும்பை சென்ற பொழுது குழந்தைகளுடன் ஏர்போட்டில் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அதிலும் நயன்தாரா நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஜெய் ஜோடியாக தனது 75 வது படத்தையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார் நயன்தாரா.

seithichurul

Trending

Exit mobile version