தமிழ்நாடு

ஒரு சிங்கம் எம்.எல்.ஏஆக வந்தால் எப்படி இருக்கும்? அண்ணாமலைக்கு வாக்கு சேகரித்த நடிகை நமிதா!

Published

on

நடிகை நமீதா சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் அவர் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் அரவக்குறிச்சி தொகுதிக்கு நேற்று வந்த நடிகை நமீதாவை அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் ஒரு சிங்கம் மாதிரி, ஒரு சிங்கமே எம்எல்ஏவாக வந்தால் இந்த தொகுதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சூப்பராக இருக்கும் அல்லவா?

அண்ணாமலை நன்றாக படித்தவர், எல்லா விதிகளும் தெரிந்தவர், திறமையானவர், டிஜிபியாக இருந்தவர், மக்கள் மனதில் இடம் பிடித்தவர். எனவே அவர் நம்முடைய தொகுதியில் போட்டியிடுகிறார், அவரை வெற்றிபெறச் செய்யுங்கள், தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று நமீதா கூறினார்.

மேலும் நம்முடைய அண்ணாமலை உங்களுடைய சொந்த பிள்ளை மாதிரி இருப்பார். உங்களுடைய சொந்த ஊர்க்காரர்கள். எனவே அவருக்கு நீங்கள் ஆதரவு கொடுங்கள். நீங்கள் உங்கள் வாக்குகளை அவருக்கு போடுங்கள். அரவக்குறிச்சியில் தாமரை வளரும் தமிழ்நாடு வளரும் என்று கூறினார். திக்கி திணறி நமீதா பேசிய தமிழை அந்த பகுதியில் உள்ள அனைவரும் ரசித்தனர்.

seithichurul

Trending

Exit mobile version