சினிமா செய்திகள்
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனா: நடிகை நதியா வேதனை!
நடிகை நதியா இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அப்படி இருந்தும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்தவர் நதியா என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சுரேஷ் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நதியா திடீரென அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.
நதியாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பதும் இருவரும் தற்போது நாயகிகளாக நடிக்கும் அளவுக்கு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நதியா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்தினருக்கும் புகைப்படங்களை பதிவு செய்வார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை நதியாவுக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கு மட்டுமின்றி அவருடைய அம்மா அப்பா மற்றும் வீட்டில் பணிபுரிவோர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதால் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசாங்கம் கேட்டுக் கொண்டபடியே தான் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அப்படி இருந்தும் தனக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரியவில்லை என்றும் நடிகை நதியா தெரிவித்துள்ளார்.
நடிகை நதியாவுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக லிங்குசாமி இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளிவந்தது. மேலும் நடிகை நதியா, தற்போது ’த்ரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.