சினிமா செய்திகள்
நடிகை மும்தாஜ் பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தினாரா? காவல்துறை அதிரடி நடவடிக்கை
நடிகை மும்தாஜ் வீட்டில் பணிபுரிந்த இளம்பெண் ஒருவர் காவல் துறையில் தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மும்தாஜ் சென்னை அண்ணாநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பணிப்பெண்ணாக பணி புரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென பணிப்பெண்களில் ஒருவர் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு சென்று தனக்கு அதிக வேலை கொடுப்பதாகவும் தான் இனிமேல் இங்கு பணிபுரிய முடியாது என்றும் தன்னை பெற்றோரிடம் ஒப்படைத்து விடுமாறு தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மும்தாஜ் இடம் காவல்துறையினர் விசாரித்தபோது பணிப்பெண்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒருவர் மட்டும் ஊருக்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார் என்றும் இருவரையும் தங்கள் குழந்தை போல் தாங்கள் வளர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பணிப் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து உடனடியாக சென்னை வந்து அந்த பெண்ணை அழைத்துச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இன்னொரு பெண்ணிடம் விசாரணை செய்தபோது அவர் இந்த வீட்டிலேயே தான் வேலை செய்ய விரும்புவதாகவும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.