சினிமா செய்திகள்

மீராமிதுனுக்கு போலீஸார் அனுப்பிய சம்மன்: ஆஜராவாரா? தலைமறைவாரா?

Published

on

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக மீராமிதுன் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நிலையில் அவரிடம் விசாரணை செய்ய போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான மீராமிதுன் சர்ச்சையில் அவ்வப்போது சிக்குவது வழக்கமாக கொண்டுள்ளார். விஜய், சூர்யா உள்பட பல பிரபலங்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார் என்பதும் ஆனால் திரையுலகினர் இதனை கண்டு கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. குறிப்பாக திரையுலகைச் சேர்ந்த பட்டியல் இன மக்களால் தான் திரையுலகில் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக அவர் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும்  நடிகை மீராமிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் இந்த சம்மனை ஏற்று மீராமிதுன் போலீசார் முன்பு ஆஜராவாரா? அல்லது தலைமறைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version