டிவி
பிக்பாஸ் 4 போட்டியாளரின் சவாலை ஏற்று மரம் நடும் நடிகை மீனா..!
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவரின் சவாலை ஏற்று நடிகை மீனா தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டார்.
பிக்பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தேவி நாகவள்ளி. இவர் தேசிய பசுமை நடவு திட்டத்தின் மூலம் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நடவு செய்தார். அதைப் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு இதேபோல் மரக்கன்று நட நடிகை மீனாவுக்கு சவால் விடுத்தார். நடிகை நாகவள்ளியின் சவாலை ஏற்று நடிகை மீனாவும் தனது வீட்டில் மரக் கன்று ஒன்றை நட்டார்.
தேவி நாகவள்ளியை பாராட்டியதோடு இந்தத் திட்டத்தை முதன் முதலாகத் தொடங்கிய தெலங்கானா எம்.பி சந்தோஷ்குமாரின் முயற்சிக்கும் நடிகை மற்றும் எம்.எல்.ஏ ர்ரோஜா செல்வமணியின் முயற்சிக்கும் நடிகை மீனா பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். சிறிது மாதங்களுக்கு முன்னர் கூட தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் தளபதி விஜயை மரக்கன்று நட சவால் விடுத்த போது அதை ஏற்ற நடிகர் விஜய் தனது வீட்டிலும் கன்று வைத்து ட்விட்டரில் பதிய இரு பெரு ஜாம்பவான்களும் வைரல் பட்டியலில் இணைந்தனர்.
நடிகை மீனா தற்போது தமிழ் சினிமா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்தே படத்திலும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் உடன் த்ரிஷ்யம் பாகம் 2 திரைப்படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.