சினிமா
மாட்டிட்டு அவஸ்தைப்படுறவருக்கு பாவம் என்ன கட்டாயமோ? சேரன் குறித்து கஸ்தூரி டுவீட்!
பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடந்து வருகிறது. மிகவும் சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன் கலந்துகொண்டுள்ளார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே சேரனுக்கும், மீரா மிதுனும் இடையே ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. மீரா எப்பொழுதும் சேரன் மீது ஏதாவது குறை கண்டுபிடித்து அவர் மீது குற்றம் சுமத்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மீரா அதன் எல்லைக்கே சென்று சேரம் மீது அபாண்டமாக ஒரு பழியை போட்டுள்ளார்.
நேற்று நடந்த டாஸ்கின் போது சேரன் எதிர்பாராத விதமாக மீராவை சற்று தள்ளி லாஸ்லியாவின் கையில் இருந்த பொருளை பறிக்க முயல்கிறார். ஆனால் அதனை மீரா மிகப்பெரிய பூதாகரமான விஷயமாக மாற்றிவிட்டார். சேரன் தன்னை மிக கொடூரமாக கையாண்டதாகவும், அவர் என்னுடைய வயிற்றில் கையை வைத்து என்னை அப்படியே தூக்கி வீசியதாகவும், அது ஆக்ரோஷமாக இருந்ததாகவும், அதில் தவறான எண்ணம் இருந்ததாகவும் அடுக்கடுக்காக சேரன் மீது கழங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் மீரா குற்றம் சாட்டினார்.
இதனால் பிக் பாஸ் வீடு நேற்று மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் அந்த வீடியோவை திரும்ப பார்க்கும் போது மீரா சொன்னது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை. சேரன் சாதரணமாக மீராவை சற்று மெதுவாக ஒதுக்கிவிட்டு லாஸ்லியாவிடம் உள்ள பொருளை கைப்பற்ற முயல்கிறார். இதில் மீரா சொன்னது போல எந்த செயலிலும் சேரன் ஈடுபடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. இது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், ABSOLUTELY UNBEARABLE TO WATCH! மூணு வருஷமா கேட்குறாங்களே இந்த வருஷம் போகலாம்ன்னுட்டுதான் கொஞ்சம் பார்த்துட்டு வர்றேன். ஆனா நேத்து எபிசொட் பார்த்தப்புறம் “ஐயோ சாமி ஆளை வுடு” என்ற feeling தான் வருது. மாட்டிட்டு அவஸ்தைப்படுறவருக்கு பாவம் என்ன கட்டாயமோ? என பதிவிட்டுள்ளார்.